கோவை, ஆக.4- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று கோவை கணேசபுரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாதர் சங்கம் மற்றும் அஸ்வின் மருத் துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் கணேசபுரம் நடராஜாவா சக சாலையில் நடைபெற்றது. மாதர் சங்கத் தின் கிழக்கு நகர தலைவர் வனஜாநட ராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் டி.சுதாராமர் வரவேற்புரை யாற்றினார். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியத்தின் அவசியம் குறித்து டி1 காவல்நிலையம் இளம் ஆய்வாளர் ஞான சேகரன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அஸ்வின் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அஸ்வின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு நகரக் குழு செயலாளர் என்.ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கிழக்கு நகர செய லாளர் த.நாகராஜ் மற்றும் வழக்கறிஞர் நாகராஜ் உள்ளிட்டோர் முகாமை வாழ்த்தி உரையாற்றினர். முன்னதாக இந்த இல வச பொதுமருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயணடைந்தனர்.