tamilnadu

ஓமலூர் மற்றும் திருச்செங்கோடு முக்கிய செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில்   லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  ரூ.4.86 லட்சம் பறிமுதல்

ஓமலூர், மார்ச் 13- ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்  பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வியாழனன்று ஆய்வு மேற் கொண்டார்.   சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணி களை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்  ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் கர்ப்பிணி பெண் களுக்கு முறையாக நிதி உதவி வழங்கப்படு கிறதா என கேட்ட போது, சிலபேர் இன்னும்  நிதியுதவி வேண்டி பதிவு செய்யவில்லை எனகூறினர். இதைத்தொடர்ந்து இது வரை எதனை கர்ப்பிணிகள் விண்ணப்பித் துள்ளனர் அதில் எத்தனை பேருக்கு நிதி யுதவி வழங்கப்பட்டது.பதிவு செய்யாத கர்ப்பிணிகளை கண்டறிந்து உடனடியாக பதிவு செய்து விளக்கமான அறிக்கை வழங்குமாறு சுகாதாரத்துறையினருக்கு ஆணையிட்டார்.  இதன்பின் விசக்கிருமி களான பாம்பு மற்றும் நாய்கடிக்களுக்கு போதியளவு மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.  இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வரும் சொட்டு நீர்பாசனம்  குறித்து திண்டமங்கலம் ஊராட்சி  பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில்  பயிர்களை நேரில் சென்று பார்வை யிட்டார். மேலும் சுத்தப்பட்டு கைத்தறி  தொழிலாளிகளிடம் எளிதாக மூலப் பொருட்கள் கிடைக்கிறதா, கைத்தறித்  தொழில் போதியளவு வருமானம் கிடைகிறதா எனவும் கேட்டுக்கொண்டார். இறுதியாக திட்டமங்கலம் ஊராட்சியில் அரசு நர்சரி கார்டனில் நாட்டு கொய்யா, பேரீச்சம்பழம், வேம்பு, நொச்சி, மூலிகை செடிகள் உள்ளிட்ட செடிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என சுற்றி பார்த்தார். இந்த ஆய்வில் மாவட்ட திட்ட அலு வலர் அருள்ஜோதி அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வேளாண்மை உதவி இயக்குனர் நீலாம்பாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓமலூர் பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்செங்கோடு, மார்ச் 13- திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவ லகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.4.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள  புதிய கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவ லகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவ லகத்தில் வியாழனன்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் சார் பதிவாளர் தமிழ்செல்வன் மற்றும் பத்திர  எழுத்தர்கள், புரேக்கர்கள் என 10க்கும் மேற் பட்டோர் இருந்தனர். அவர்களிடம் விசா ரணை நடத்தினர். தொடர்ந்து அலுவல கத்தில் அதிகாரிகள் விடிய, விடிய நடத்திய சோதனை அதிகாலை 5 மணியளவில் முடிந்தது. சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 400  கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.  சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச  ஒழிப்பு போலீசார் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.