அவிநாசி, ஆக. 27- அவிநாசி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத் திற்கு சொந்த கட்டிடத்தில் அலுவலகம் அமைக்க அரசு இட மளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அவிநாசி வட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத் தின் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இயக்குனர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இயக்குனர் மோகனசுந்தரம் பேசுகையில், ஆண்டிற்கு ரூ.5 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆனால் வீட்டு வசதி சங்கத்திற்கு என்று நிரந்தர மான அலுவலகம் இன்றி வாடகை கட்டிடத்தில் செயல்படு வது வேதனையாக உள்ளது. எனவே, உடனடியாக அலுவல கம் அமைக்க அரசு இடம் ஒதுக்கீடு கோர வேண்டும் என்றார். இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் பழனிசாமியிடம் கேட்டபோது, 2013ல் இருந்து அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மாத வாடகையாக ரூ.10,500 கொடுத்து வருகிறோம். நிரந்தர கட்டடம் வேண்டி சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது. வட்டாட்சியர் இடமும் கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது என தெரிவித்தார்.