கோவை, நவ. 7– அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வந்த சிஆர்ஐ பம்ப் நிறுவனத்திற்கு வரு வாய்த்துறை அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோவை மாவட்டம், அன்னூர் வட் டத்திற்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் சுமார் 80 சென்ட் வண்டிப்பாதைப் புறம் போக்கு நிலத்தை சிஆர்ஐ பம்ப் நிறுவ னம் ஆக்கிரமித்து வாகன நிறுத்து மிடமாக பயன்படுத்தி வந்தது. இது தொடர்பாக வந்த புகாரின்பேரில் அன்னூர் வட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வியா ழனன்று முழுமையாக மீட்டனர். இதன் தோரய சந்தை மதிப்பு ரூ.7.20 கோடியா கும். இதன்பின்னர் அரசு நிலத்தை ஆக் கிரமித்து பயன்படுத்தி வந்த சிஆர்ஐ பம்ப் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதனை உடனடியாக வசூல் செய் தனர்.