சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் முழக்கம்
திருப்பூர், நவ. 28 – ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளுக்கு எதிராக தற் காப்பு ஆட்டம் ஆடிப் பயனில்லை, எதிர்த்துத் தாக்குதல் நடத்தும் போராட்டம் என்ற ஆட்டமே இன் றைய கட்டாயமாக உள்ளது. அந்த வழியில் தொழிலாளர்களை அணிதிரட்டி முன்னேறுவோம் என்று சிஐடியு தமிழ் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறி னார். திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்புப் பேரவை மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன் தலைமையில் நடைபெற் றது. இப்பேரவை கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் இந்திய ஜனநாயகம் பாது காக்கப்பட்டது. நிலையான ஆட்சி ஒரு கட்சி ஆட்சி என்று பாஜக ஆட்சி அமைந்திருப்பது தொழி லாளர்களை ஒடுக்குவதற்குத்தான் பயன்படுகிறது. சிஐடியு-வும், விவசாயிகள் சங்கமும் அரசியலி லும், சமூகத்திலும் விடாப்பிடி யாக தொடர்ந்து பிரச்சாரம், போராட்டம் நடத்தியதால்தான் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் உரிமைகள், விவசா யிகள் மீதான தாராளமயத் தாக்கு தலை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் எதைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மாத ஊதி யம் ரூ.18 ஆயிரம் தர வேண்டும் என்பது பற்றியோ, ஆலை மூடல், ஆட் குறைப்பு, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ விவா தங்கள் நடத்தப்படுவதில்லை. தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி இருக்கிறது, அதை நிரப்புவது யார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை யில் இயற்கையிலும் சரி, அரசி யலிலும் சரி ஒரு நிமிடம் கூட வெற்றிடம் என்பது இருப்ப தில்லை. கடந்த இரண்டாண்டு காலத்தில் 90 லட்சம் பேர் வேலை யிழந்து தெருவில் நிறுத்தப்பட்டி ருக்கிறார்கள், அதைப்பற்றி ஊட கங்கள் பேசியதா?
இதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் பேசமாட்டார்கள். ஆனால் போராடும் தொழிலா ளர்கள்தான் எல்லோரையும் பேச வைப்பார்கள். தெலங்கானாவில் 48 நாள் போராட்டம்தான் நீதி மன்றத்தைப் பேச வைத்திருக்கி றது, ஊடகங்களைப் பேச வைத்தி ருக்கிறது, நாடே பேசுகிறது! ஆகவே உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை, பேச வேண்டிய உண்மையான விசயங்களைப் பேசுவதுதான் தொழிற்சங்கத்தின் வேலை. இப்போது தடுப்பாட்டம் ஆட வேண்டிய தேவையில்லை, தாக்குதல் ஆட்டம் தான் இப் போதைய தேவை! அத்தகைய தாக்குதல் ஆட்டம்தான் ஜனவரி 8 அகில இந்திய வேலைநிறுத்தம். அப்போதும்கூட வேலை நிறுத்தம், அதன் கோரிக்கைகள் பற்றி ஊடகங்கள் பேசமாட்டார் கள். உற்பத்தி இழப்பு, வருமானம் இழப்பு, பொது மக்களுக்குத் தொந்தரவு என்றுதான் திசை திருப்புவார்கள். ஆனால் நாம் வேலை நிறுத்தம் என்ற மொழி யில் பேசினால்தான் ஆட்சியா ளர்களுக்கும், முதலாளிகளுக்கும், அரசின் அதிகார நிறுவனங்க ளுக்கும் புரியும்.
இந்திய பெருமுதலாளிகளின் மூலதனத்துக்கு எதிராக ஜனவரி 8 வேலைநிறுத்தம், திருப்பித் தாக் கும் ஆட்டமாக, தொழிலாளி வர்க் கத்தின் உணர்வுப்பூர்வமான போராட்டமாக இருக்கும். இப் போதுள்ள நமது வலிமையை, பலத்தைக் கூட்ட முடியுமானால், ஆட்சியாளர்களைப் பின்னுக்கு வாங்கச் செய்ய முடியும். இந்த எழுச்சியைத் தொடர்ந்து ஏற்படுத் தினால் பலதரப்பட்ட தொழிலா ளர்கள் நம் பக்கம் வருவார்கள். இத்தகைய விடாப்பிடியான தொடர்ச்சியான போராட்டங்கள் தான் சமூகத்தை மாற்றி அமைக் கும். சிஐடியுவின் அகில இந்திய மாநாடு சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை உலகத் தொழிற்சங்க இயக்கம் எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. சிஐடியுவின் இந்த மாநாடு இன்றைய உலகுக்கு என்ன செய்தியை சொல்லப் போகிறது என உலகின் பல்வேறு நாடு களைச் சேர்ந்த தொழிற்சங்க இயக்கங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா வில் நாம் நடத்தும் போராட்டம், அணிதிரட்டும் கோடிக்கணக் கான தொழிலாளர்கள் பல நாடு களுக்கு ஆச்சரியமாக உள்ளன. நமது மாநாடும், போராட்டமும் பிற நாடுகளுக்கு வழிகாட்டக் கூடியதாக இருக்கும். உலகின் நெருக்கடிக்கு என்ன தீர்வு என சிஐடியு மாநாடு சொல்லும் செய்தி யைக் கேட்க உலகத் தொழிற்சங்க இயக்கம் காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கொள்கைக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது, ஒவ்வொரு அரசியலுக்குப் பின்னாலும் ஒரு கொள்கை இருக்கிறது. இன்று ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைக்கு எதிரான, தொழிலா ளர் நலன் காக்கும் இடதுசாரி கொள்கை அரசியலைப் பேசுவ தாக இருக்க வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார். முன்னதாக, இப்பேரவையில் திருப்பூர் மாவட்ட சிஐடியு தொழிற் சங்கங்கள் சார்பில் அகில இந்திய மாநாட்டுக்கு முதல் தவணை நிதியாக ரூ.5.50 லட்சம் அ.சவுந் தரராசனிடம் ஒப்படைக்கப்பட் டது. இதனை அந்தந்த சங்கங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் சிஐடியு மாநி லச் செயலாளர் கோபிகுமார், மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்டப் பொருளாளர் டி.குமார் உள்பட சங்க நிர்வாகி கள், முன்னணி ஊழியர்கள் திர ளானோர் கலந்து கொண்டனர்.