கொரோனா தாக்குதல்:
திருப்பூர், மார்ச் 20 – கொரோனா தாக்குதல் கார ணமாக உலக ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற் பத்தி தொழில் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் பொரு ளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரில் அனைத்துத் தொழில் அமைப்பு நிர்வாகி களின் அவசரக் கூட்டம் வியாழ னன்று ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்ட அடிப்படையில், பின்ன லாடை நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு மற் றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் உலக ளாவிய மற்றும் உள்நாட்டு சந்தையில் உள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தேவையான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்குக் கடிதம் எழுதி யுள்ளனர். இந்த கடிதத்தில் உலகளவில் அனுப்பிய ஏற்றுமதி சரக்குகளை அங்கிருக்கும் வர்த்தகர்கள் பெற்றுக் கொண்டு பணம் அனுப் புவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவித்திருப்பதாகவும், மேலும் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஆர்டர்களை சிலர் ரத்து செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர். உள்நாட்டிலும் பெரிய மால்கள் (வணிக வளாகங்கள்) சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள் நாட்டு பின்னலாடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. சாய சலவை பொருட்களின் விலை யும் 30 சதவிகிதம் அதிகரித் துள்ளது. இத்தகைய இக்கட் டான சூழ்நிலையில் பின்ன லாடைத் தொழிலுக்கு நிதி சார்ந்த நெருக்கடிகளைத் தவிர்க்க வேண் டும். வங்கிகள் செயல்படா கணக் குகள் (என்பிஏ) என பனியன் நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கேட் டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன் றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும், சீனாவிலும் அரசு பொருளாதார ரீதியாக மேற்கொண்டுள்ள மீட்பு நட வடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலும், பின் னலாடை தொழிலுக்குத் தேவை யான பொருளாதார மீட்பு நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளுமாறு தொழில் துறையினர் கேட்டுக் கொண் டுள்ளனர். இது குறித்து நிர்மலா சீத்தா ராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் வருமாறு: வங்கி கள் கடனைச் செலுத்தாத நிறு வனங்களை என்பிஏ வகை என பட்டியல் இடுவதை நிறுத்த வேண்டும். பின்னலாடை தொழில் நிறுவனங்கள் அசல் மற்றும் வட்டியை செலுத்து வதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். எவ்வித வைப் புத்தொகை, பிணையும் இல்லா மல் கூடுதலாக 25 சதவிகித நடை முறை மூலதனக் கடன் வழங்க வேண்டும். அத்துடன் ஏற்றுமதி சார்ந்து பெறக்கூடிய நிதி வந்து சேர்வதற்கான கால அவகாசம் ஒன்பது மாதம் என்று இருப்பதை பனிரெண்டு மாதங்களாக அதி கரித்திட வேண்டும் என்றும் கேட் டுக் கொண்டனர். சந்தைப் பொருளாதாரத்தை மீண்டும் துடிப்புடன் செயல் படுத்துவதற்கு நிதித் தொகுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். நெருக்கடியான நேரத்தில் தொழில் துறையினர் நம்பிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள னர்.