tamilnadu

img

புதிய கல்விக்கொள்கை வரைவு நகல் எரிப்பு மத்திய அரசிற்கு எதிராக மாணவர்கள் ஆவேசம்

சேலம், ஜூன் 27- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை யின் வரைவு நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆவேச போராட் டங்களில் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு  ‘’வரைவு தேசிய கல்வி கொள்கை அறிக்கை 2019’’ என்ற வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையா னது கல்வியை கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு தாரை வார்க்கும் வகையிலும், கல்வி யில் காவிமயத்தை புகுத்திடும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், மாநிலங்களின் உரிமைகளையும், மொழி உரிமையையும், கல்வி பெறும் உரிமையையும் பறிக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இதனை கண்டித்து இந்திய மாண வர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் இக்கல்விக் கொள் கையின் நகல் அறிக்கையை எரித்து  எதிர்ப்பு தெரிவித்திட அறைகூவல் விடுத் திருந்தது.  இதன்ஒருபகுதியாக, சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தாஸ் தலைமையில் புதிய கல்வி கொள்கையின் நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கவின் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.