கோபி, ஜூன் 19- கொடிவேரி தடுப்பணையின் உள் தண்ணீர் உறிஞ்சி புதிதாக அமைக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்தினைக் கண்டித்து விவசா யிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் அக்கரை கொடி வேரி ஊர் பொதுமக்கள் அணையை முற்றுகையிட்டு புதனன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை 900 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றுக்குக் குறுக்கே கட்டப் பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை யின் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுகாக்களில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட் டத்தை செயல்படுத்த அணையின் உள் பகுதியில், தடப்பள்ளி வாய்க் காலுக்குத் தண்ணீர் செல்லும் வழி யிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப் பெரிய அளவிலான கிணறு தோண்டப்பட்டு வருகிறது.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள் மற்றும் 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக் கான கொடிவேரி அணையை நீர் ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவாகும். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ் சிகோயில், பெத்தாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உட்பட குன்னத்தூர் ஊத்துக்குளி பேரூராட்சிகள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தில் கொடிவேரி அணையின் நீர்த்தேக்கப்பகுதியின் மத்தியில் நீர் உந்து நிலையம் அமைக் கப்பட்டு ராட்சஷ மோட்டார் மூலம் திங்களூர் வரை கொண்டு செல்லப் பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின் னர் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படவுள்ளது. ரூ.224 கோடி செலவில் அமைக்கப்பட வுள்ள இந்தத் திட்டத்தை செயல் படுத்தும்போது கொடிவேரி அணையை ஆதாரமாகக் கொண் டுள்ள வேளாண் விளை நிலங்கள் போதுமான நீரின்றி பாதிக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்தப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் வாழும்மக்கள் விவசா யத்தைச் சார்ந்தும் போர்வெல் லாரி மற்றும் டெக்ஸ்டைல்ஸ், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட் டால் பழமை வாய்ந்த அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். தடப்பள்ளி பாசன விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கொடிவேரி மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும், சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற் கொள்வது பாதிக்கப்படும். அமைதி யான அக்கரை கொடிவேரி கிராமம் மற்றும் பெரிய கொடிவேரி கிராமம் எதிர்காலத்தில் பாதிப்பை சந்திக்க வேண்டியதாகிவிடும் என தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள், விவசாயக்கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் இரு கிராம பொதுமக்கள் ஒன்றி ணைந்து 1000க்கும் மேற்பட்டோர் புதனன்று அணையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை நிறுத்தக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நடைபெறும் தகவலை அறிந்து 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட் டக்காரர்களிடையே பொதுப்பணித் துறையினர் மற்றும் கோபிசெட்டி பாளையம் உட்கோட்ட காவல் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பணி நிறுத்தி வைக்கப்படும் என் றும், விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை செய்து முடிவெடிக்கும் வரை பணிகள் தொடராது என்றும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் கொடிவேரி அணைப் பகுதி யில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், காலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூரி லிருந்து அணைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.