tamilnadu

img

நடூர் விபத்து - சுவற்றின் உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டம்

தொல்.திருமாவளவன் தலைமையில் விசிக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 16 –  மேட்டுப்பாளையம் நடூர் பகுதி யில் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்த்திற்கு காரணமான சுவற் றின் உரிமையாளர் மீது வன்கொ டுமை சட்டத்தில் கைது செய்ய வேண் டும் என்பதை வலியுறுத்தி தொல்.திருமாவளவன் தலைமையில் கோவையில் திங்களன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் நடூர் பகுதியில் 20 அடி உய ரம் கொண்ட சுற்றுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் தொல்.திருமாவளவன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர்  எழுப்பி உள்ளதாகவும், இதற்கு கார ணமான உரிமையாளர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு  பதிவு செய்துள்ளதை திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் எம்பி பேசுகையில், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமு றைப்படுத்தவில்லை. தலித் மக்க ளுக்கு எதிராக அதிமுக அரசு செயல்ப டுகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதி ராக ஜனநாயக சக்திகள் ஒன்றி ணைந்து போராட்டம் நடத்தவேண் டும். இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு எதி ரான சட்டம். தில்லியில் போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசு பாசிசத்தை ஏவுவதாககுற் றம் சாட்டிய அவர், குடியுரிமைசட்டத் தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க கட்சி யின் தலைவர்களான வன்னியரசு, மண்டல செயலாளர் சுசி.கலையர சன், மாவட்ட செயலாளர்கள் ஜோ.இலக்கியன் உள்ளிட்ட நூற் றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.