திருப்பூர், நவ. 20 - திருப்பூர் அருகே வாவிபாளையம் கிளை நூலகத்தில் 52ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. வாவிபாளையம் கிளை நூலகத்தில் செவ்வா யன்று பொது சுகாதாரத் துறையும், பொது நூலகத் துறையும் இணைந்து இவ்விழாவை நடத்தி னர். இந்த விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்க ளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. நூலக வாரவிழாவில் புத்தகக் கண்காட்சி, மாணவர்களுக்கு போட்டி, வாசிப்பு இயக்கம் ஆகியவையும் நடத்தப்பட்டன. பின்னர் மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதிய புரவலர்க ளாக வி.சண்முகராஜ், எல்ஐசி முகவர் சி.பாலசுப்பி ரமணியம் ஆகியோர் இணைந்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யின் தலைமையாசிரியர் தேவகுமார் கலந்து கொண் டார். இறுதியில் நூலகர்கள் எஸ்.சண்முகசுந்தரம், கே.பாக்கியலட்சுமி ஆகியோர் நன்றி தெரிவித்த னர்.