மின்சாரம் தாக்கி மின் பணியாளர் பலி
நத்தம், மே, 31 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் ராஜா (25).இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக மின்பணியாளராக பணி புரிந்தார்.கடந்த 24-ஆம் தேதி மூங்கில் பட்டியில் தெரு விளக்கு பழுது பார்க்கும் போது மின்சாரம் இவர் மீது மின்சாரம் பாயந்த்து. படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு ராஜா உயிரி ழந்தார். நத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஆட்சியருடன் திமுகவினர் சந்திப்பு
சிவகங்கை, மே 30- கொரோனா நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட மக்கள் திமுக தலைவரும் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி னர். அந்த மனுக்களை திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரு மான பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமுத்து, சேங்கை மாறன்,நகர் செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்த னிடம் வழங்கினர்.
பெரியகுளம் சப் ஜெயிலர் மீது வழக்குப் பதிவு
தேனி, மே28- முகநூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவத் திருமாவளவனை அவ தூறு செய்ததாக பெரியகுளம் சப்ஜெயி லர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெரியகுளம் கிளைச் சிறையில் சப்ஜெயிலராக பணிபுரிபவர் முத்து. இவர் கவின்கார்க்கி என்ற பெயரில் முக நூல் கணக்கு வைத்துள்ளார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவனை அவதூறு செய்த தாக மாவட்டச் செயலாளர் தமிழ்வாணன் பெரியகுளம் காவல் துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் தென்கரை காவல் துறையினர் முத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
86 பேர் தனியார் கல்லூரியில் தனிமை
சிவகாசி, மே 30- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலி ருந்து சிவகாசிக்கு 86 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிவகாசி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர் மகா ராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு வேலை களைச் செய்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறி விக்கப்பட்டது. இதனால், வேலையின்றி தவித்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு ரயில் மூலம் 86 பேர் நாகர்கோவில் வந்த னர். அங்கிருந்து அனைவரும் பேருந்து கள் மூலம் சிவகாசி-விருதுநகர் சாலை யில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். இந்த நிலையில் வெள்ளியன்று 86 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.
ஓடையில் மணல் அள்ளும் மணல் மாபியாக்கள்
தேனி ,மே 30- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பட்டா நிலத்தில் மணல் அள்ள அனுமதி பெற்று விட்டு, ஓடைகளில் மணல் அள்ளி மணல் மாபியாக்கள் விடிய விடிய கடத்துவதாக தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது . இது குறித்து சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் பி.ராமன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:- ஆண்டிபட்டி வட்டம் பழைய கோட்டை வரு வாய் கிராமம், சர்வே என் 8 -இல் உள்ள எட்டு ஏக்கர் தனியார் நிலத்தில் மணல் அள்ள தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்ற நபர்கள் நாகலாறு ஓடை, ஜக்கம்மாள்பட்டி அருகே ஓடைகளில் மணல் அள்ளி இரவு பகலாக டிராக்டரில் கடத்தி வருகிறார்கள். இதனால் விவசாயம் நிறைந்த நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன், குடியிருப்புப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.