tamilnadu

மர்ம காய்ச்சல்- 25 காவலர்களுக்கு சிகிக்சை

கோவை, ஜூன் 21-  தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான் காம் பட்டாலியனைச் சேர்ந்த காவலர் கள் திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.  கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் நான்காம் பட்டாலியன் குடியிருப்பு உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். இதில், இவர்களுக்கு ஆறு மாத சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள காவ லர்களுக்கு திடீரென காய்ச்சல் பரவியது. இதில் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டனர். முதலில் புதனன்று 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், வியாழ னன்று 15 பேர் சிகிச்சை பெற்றனர்.  இவர்களில், நந்தகுமார் (24), செல்வர் சுந்தரம் (28), கருப்புசாமி (23), செல்வ குமார் (26), அலெக்ஸ் (24), மணிகண்டன் (29), தீனதயாளன் (27), அறிவழகன் (25) ஆகிய 8 பேர் காய்ச்சல் சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்றுவரும் சிறப்பு காவல் படையினரில் பலருக்கு ஒரே நேரத்தில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பது காவலர்கள் மத்தியில் பீதியை ஏற் படுத்தியுள்ளது.