- காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக கூறி சாலை மறியல்
சேலம், மே 23 - சேலத்தில் நில ஆக்கிர மிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகியை தட்டிக்கேட்ட தொழிலாளியை, காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் அராஜகமான முறை யில் கைது செய்தனர்.
சேலம் மாநகரம், திருவாக்கவுண்டனூர் அருகிலுள்ள சுகுமார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளித் தொழிலாளி சரவ ணன். இவர் வீட்டின் அருகே வசித்துவரும் திலகா என்பவர், அருகில் உள்ள நெருஞ் சாலை நகர் கூட்டுறவு வங்கியின் இயக்கு னராக உள்ளார். மேலும், இவர் அதிமுக வின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வரு வதாக கூறப்படுகிறது. இவர் தனது செல் வாக்கை பயன்படுத்தி நிலத்தை ஆக்கிர மிப்பு செய்ததாகத் தெரிகிறது. இப்பிரச் சனையை தட்டிக் கேட்ட சரவணனை திலகாவின் கணவர் ரவி தாக்கியதுடன், சூரமங்கலம் காவல்நிலையத்தில் சரவணன் மீது பொய் புகார் அளித்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவ லர்கள் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின் சரவணன் திடீ ரென உயிரிந்துள்ளார்.
இதனால் ஆவேச மடைந்த அவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திருவாக்கவுண் டனூர் பைபாஸ் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் இப்போராட்டத் திற்கு ஆதரவாக பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி மற்றும் அவரது கணவர் இருருதயசாமி ஆகியோர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டனர். இதற்கிடையே, இவர்கள் கைது செய் யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம். குணசேகரன், மாந கர மேற்குச் செயலாளர் எம். கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலகிருஷ் ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் டி. பரமேஷ்வரி, துணைத்தலைவர் கே. ராஜாத்தி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் கணேசன் ஆகியோர் சென்று பார் வையிட்டதோடு, காவல் துறையினரின் அராஜக போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.