tamilnadu

முத்துப்புதூர் பள்ளியை இடமாற்றம் செய்யக் கூடாது

 திருப்பூர், ஜூலை 24 – திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் முத்துப்புதூர் (எம்.ஜி.புதூர்) மாநகராட்சிப் பள்ளியை இடமாற்றம் செய்யாமல் அதே இடத்தில் தொடர்ந்து செயல் படுவதை உறுதிப்படுத்த வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரக் குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் புதனன்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் முத்துப்புதூரில் 70  வருடங்களுக்கு முன்பு ஆரம்பப் பள்ளியாக தொடக்கப்பட்டு இன்று  நடுநிலைப் பள்ளியாக உயர்ந் துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் எம்ஜி  புதூர், தட்டான்தோட்டம், காமாட்சி யம்மன் கோவில் வீதி, துளசிராவ்  வீதி, மரக்கடை சந்து உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து பல நூற்றுக் கணக்கானோர் படித்து வந்தனர். தனியார் பள்ளிகள் அதிகமாக வந்ததற்கு பின்னாலும் தற்போது 200 மாணவர்கள் வரை படித்து வருகிறார்கள். கடந்த காலத்தில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், தொழில்நடத்துவோர், வர்த்த கர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் உருவாக காரணமாக இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளி இது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி, வளர்ச்சி என்ற பெயரைச் சொல்லி இப்பள்ளியை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர் வாகம் முயற்சித்து வருகிறது. கடைக்கோடியில் உள்ள மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு பயன்பட்டு வரும் இப்பள்ளியை அப் புறப்படுத்தப் போவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் நல்லெண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்கள் பலர் கல்விக்காக நிலத்தைத் தானமாக கொடுத் தார்கள். அவர்கள் நிலத்தை ஒரு போதும் திரும்பக் கேட்டதில்லை. இதன் விளைவாக திருப்பூரின் கல்வி  வளர்ச்சிக்கு இந்த பள்ளிகள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் தற்போது மாநகராட்சி மாமன்றம் போன்ற உள்ளாட்சி அமைப்பு, மேயர், மாமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், பள்ளிக்கூட இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என அறிவித்து திரும்ப எடுப்பதாக தன்னிச்சையாக மாநகராட்சி அறிவித்தது நியாயமுள்ளதாக தெரியவில்லை. எக்காரணம் கொண்டும் கல்விக்கூடத்தை அப் புறப்படுத்துவதை பொது மக்கள் ஏற்கவில்லை. தற்போது வேறு பள்ளிக்கு மாற்றும் எண்ணமில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக உள்ளது. அதேசமயம் சாதாரண ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில முத்துப் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி  என்ற பெயரில் அதே இடத்தில் தொடர வேண்டும் என மக்களிடம்  எதிர்பார்ப்பு உள்ளது. இப்பள்ளிக் கான இடத்தை விட்டுவிட்டு மீத முள்ள இடத்தில் பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பள்ளிக்குள் உள்ள இதர அரசு அலுவலகங்களை மாறுதல் செய்ய வேண்டும். மாநகரின் இருதயப் பகுதியில் உள்ள இப் பள்ளி இங்கே தொடரவும், பள்ளிக்குத் தேவையான அடிப் படை வசதிகளை செய்து தரவும் ஆவன செய்ய வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர்  தெற்கு மாநகரக் குழு சார்பில் டி. ஜெயபால் கேட்டுக் கொண்டுள் ளார்.