tamilnadu

img

சட்டவிரோத மது விற்பனையை தடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல்

நாமக்கல், நவ.15- ராசிபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையை  தடுக்க வலியுறுத்தியவர்களுக்கு கொலை மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம்  நகராட்சி 11ஆவது வார்டு பகுதியில் 300 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற் பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வலியு றுத்தி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந் நிலையில் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மூலம்  அப்பகுதியினருக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ள தாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராசிபுரம்  காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில்  சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க வலியு றுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. 

;