tamilnadu

img

திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை

திருப்பூர், மே 5 –திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த செட்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். ஞாயிறன்று காலை திருப்பூர் பிஎன் ரோடு மாநகராட்சி பூங்கா அருகே கட்டிட வேலைக்கு கூலி ஆட்களை அழைத்துச் செல்வதற்காகவந்திருக்கிறார். இங்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் இவருக்கும், வேறொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கூலி ஆட்களை அழைத்துச் செல்ல முயன்றபோது நான்கு பேர் கொண்ட கும்பல் இவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே ஆரோக்கியசாமிஉயிரிழந்துவிட்டார். சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.