tamilnadu

வாஷிங்டன் ,மும்பை முக்கிய செய்திகள்

எச்.1 பி விசா விண்ணப்பக் கட்டணத்தை  அமெரிக்கா உயர்த்தியது

வாஷிங்டன், நவ. 9- எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு  தங்கியிருந்து வேலை செய்வ தற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது.  இந்த ‘எச்-1 பி’ விசா வழக்க மாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பின்னர் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த விசாவை உலக நாடுகளில்  அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், எச்.1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.  இந்தக்கட்டணம் திரும்ப பெற முடியாத கட்டணம் ஆகும்.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான  தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுதில்லி, நவ. 9- ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக் கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறை யில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக் கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தில்லி உயர்நீதி மன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசார ணையில் வாதங்கள் முடிந்தன.இதை யடுத்து ஜாமீன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சிவசேனை எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு  கோரி காவல் துறைக்கு கடிதம்

மும்பை, நவ. 9-  மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய  எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்   ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பதவி வேண்டும் என்ற சிவசேனையின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெள்ளியன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர் வான புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் மும்பை காவல் ஆணையருக்கு வெள்ளியன்று எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை சந்தித்து விரைவில் ஆலோசனை நடத்த உள் ளார். எனவே, புதிதாக தேர்வு செய் யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.