tamilnadu

img

தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்படும் மலைப்பகுதி மாணவர்கள்

ஈரோடு, ஜூலை 24- சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதி யில் தொண்டை அடைப்பான் நோயால் மாணவர்கள் பாதிக்கப் பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை யினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறப்பு முகாம் நடத்திட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 630 மாணவ, மாணவியர்கள் பயின்று  வருகிறார்கள். இதேபோல் இப்பகுதியில் ஒரு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், கடந்த இரண்டு வாரங்க ளுக்கு முன்பு மல்லியம்மன் துர்க்கம் பகுதியில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் இரண்டு பேருக்கு டிப்தீரியா பாதிப்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதனைய டுத்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டனர். மேலும், இந்த தொண்டை அடைப்பான் நோய் வராமல் இருப்பதற்காக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பொழிவு இருந்த காரணத்தால், தற் பொழுது தொண்டை அடைப் பான் நோய் அதிகரித்து மாணவ,  மாணவிகளிடம் பரவியுள்ளது. இத னால் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்டோர் தொண்டை வலி  காரணமாக கடம்பூரில் செயல் பட்டு வரும் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த தொண்டை வலிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயகுமார் கூறுகையில்,  தொண்டை அடைப்பான் நோய் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஐந்து நாள் குழு அமைக்கப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. விடு முறையில் இருந்த மாணவர்களை யும் கண்டறிந்து அவர்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட் டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து  இந்த தொண்டை அடைப்பான் நோய் பரவி வருகிறது. இதனால் தொண்டை வலி ஏற்படும் மாணவ-மாணவியர்களை உடன டியாக வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தி வருகிறோம். இந்த நோய் பரவலால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடன டியாக சிறப்பு முகாம் நடத்தி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை  மருத்துவர் விக்னேஷ் கூறுகை யில், தொண்டை அடைப்பான் நோய் சளி மற்றும் காலநிலை காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது. டிப்தீரியா நோய் காரணமாக  மாணவ, மாணவிகளின் பெற் றோர்கள் அதிகமாக அச்சமடைந் துள்ளனர். தொண்டை வலி என்பது பல விதமான நிலையில் ஏற்படுகிறது. தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம். மலைப் பகுதி முழுவதும் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு 2 வயது குழந்தை முதல் 16 வயது உள்ள குழந்தைகள் வரை அனை வருக்கும் தடுப்பூசி போடப்பட் டுள்ளது. தொடர்ந்து கண்காணிக் கப்பட்டும் வருகிறது. கால சூழ் நிலை காரணமாக தற்போது தொண்டை அடைப்பான் நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான உரிய மருந்துகளை அளித்து வருகிறோம். மாணவ மாணவிகள் அனைவரையும் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.