tamilnadu

img

சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

அன்னூர், ஜூலை 13- அன்னூர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்ட, மூடப்படாத குழிகளால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத் துக்குள்ளாகி வருகின்றனர். அன்னூர் வழியாக திருப்பூருக்கு 3 குடிநீர் திட்டக் குழாய்கள் செல்கிறது. இதில் அன்னூரில் இருந்து சோமனூர் பிரிவு வரை  பல்வேறு இடங்களில் குடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளி யேறி  வருகிறது. இவ்வாறு குடிநீர் வீணா வது மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் நீர்த்தேங்கி அரிப்பு ஏற்பட்டு, சாலைகள் குண்டும் குழியுமாகி வருகிறது.  இவ்வாறு உடைந்த குடிநீர் குழாய் மற்றும் அதனால் ஏற்பட்ட பள்ளங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சீரமைக்கப் பட்டாலும், அதற்காகத் தோண்டப்படும் குழிகள் சரியாக மூடப்படுவதும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் இரவு நேங்களில், அதிக அளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக தோண் டப்பட்ட குழிகளை உடனடியாக மூட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.