tamilnadu

img

வாகன ஓட்டுனர் கடத்தி தாக்குதல் - நடவடிக்கை எடுக்காத காவல்துறை

சிஐடியு சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்

கோவை, பிப்.4–  வாடகை வாகன ஓட்டுநரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்மநபர் களை கைது செய்யாமல் அலட்சி யப்படுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் சிஐடியு சங்கத்தினர் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் பாப்பம்பட்டி பிரிவில்  வாடகை வாகனங்கள் நிறுத்துமிடம்  உள்ளது. இங்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு செந்தில்குமார் என்பவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது புலிப்படை என்கிற பெயரு டைய வேறு ஒரு வாகனத்தின் மீது தெரியாமல் இடித்துள்ளது. இதற்கு மன்னிப்புக் கேட்டு இருதரப்பும் சமா தானமாகி சென்றுள்ளனர். இதனைய டுத்து சம்பவம் நடந்த நான்கு நாட்க ளுக்கு பிறகு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் செந்தில்குமாரை வாட கைக்கு வாகனத்தை இயக்க வேண்டும்  எனக் கூறி பின்னர் கடத்தி சென்றுள் ளனர். இரண்டு நாட்கள் செந்தில்கு மாரை கடுமையாக தாக்கியநிலை யில் இறந்துவிட்டதாக கருதி  பாப்பம்பட்டி பிரிவு அருகில் உள்ள  காட்டுப்பகுதியில் வீசிச்சென்றுள்ள னர். இதனையடுத்து அக்கம் பக்கம்  உள்ளவர்கள் இவரை மீட்டு மருத்து வமனையில் சேர்த்தனர்.  இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மற்றும் சாலைபோக்குவரத்து சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குறைந்தபட்ச வழக்குகூட பதியாமல் காவல்துறை ஆய்வாளர் இழுத்தடித்து வந்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கு பதிந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். சூலூர் காவல்துறையினரின் இத் தகைய அலட்சியப்போக்கை கண் டித்து சிஐடியு சாலைபோக்குவரத்து  தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  பாப்பம்பட்டி பிரிவில் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர்  சி.பத்மநாபன், சாலைபோக்குவரத்து சங்கத்தின் சம்மேளன பொதுச்செ யலாளர் எஸ்.மூர்த்தி, சிஐடியு  மாவட்ட நிர்வாகி கே.மனோகரன்,  யு.கே.சிவஞானம், திமுகவின் தளபதி முருகேசன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று காவல் துறையினரின் அலட்சியப்போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.