திருப்பூர், ஜூன் 9 – திருப்பூர் மின் கோட்டத்தில் அதிக அளவு மின் நுகர்வோர் இருப் பதால் அவர்களுக்கு விரைந்து சேவை கிடைக்கவும், ஊழியர்கள் பணிச்சுமையைக் குறைக்கவும் இரு மின் கோட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை மூன்றாவது மாநாடும், பல்லடம் கிளை தொடக்க விழாவும் ஞாயி றன்று நடைபெற்றது. இதில் மின் ஊழியர் ஓய்வுபெற்றோர் அமைப்பின் செயலாளர் அச்சுதன் சங்கக் கொடியை ஏற்றி வைத் தார். சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.சம்பத் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் கிளைக்கு உட்பட்ட மின் வாரிய பகுதிகளில் பணி யாற்றும் பெண்கள் உள்பட சுமார் நூறு பேர் பங்கேற்றனர். செயலாளர் ராமலிங்கம் அறிக்கையை சமர்ப்பித்தார்.பொரு ளாளர் நாகராஜ் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் மேற்கொண்டு ஏகமனதாக அறிக்கையை இறுதிப்படுத்தினர். இம்மாநாட்டில் திருப்பூர் கிளையை பிரித்து தனியாக பல்லடம் கிளை உருவாக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். திருப்பூர் கிளை தலைவ ராகடி.கோபாலகிருஷ்ணன், செயலாளராக கே.நாகராஜன், பொருளாளராக மோகன்தாஸ் ஆகியோரும், பல்லடம் கிளை தலைவராக பி.ராமலிங்கம், செய லாளராக ஆர்.மோகன்குமார், பொருளாளராக எம்.ஜெயராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப் பட்டனர். இம்மாநாட்டில் திருப்பூர் மின் கோட்டத்தை இரண்டாகப் பிரிப்பது, ஒப்பந்தத் தொழி லாளர்களை பணியமர்த்தவும், அவர்களை பணி நிரந்தரம் செய் யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கப் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு பணி செய்ய உத்தரவு வழங்க வேண்டும். திருப்பூர் மாநக ருக்கு உட்பட்ட மின் தடை நீக்க மையத்தை புத்துயிரூட்டி செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மின் ஊழியர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் தயாளன் வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றி னார். நிறைவாக பல்லடம் கிளைப் பொருளாளர் எம்.ஜெயராஜ் நன்றி கூறினார்.