கோபி, மே 25- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பகுதிகளில் ஞாயிறன்று இரவு வீசிய சூறாவளிக்காற்றினால் அறு வடைக்கு தயாராக இருந்த பத்தாயி ரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் ஞாயிறன்று இரவு அதிகளவு சூறாவளிக்காற்று வீசத் தொடங்கி யது. அதனைதொடர்ந்து சாரல் மழை மட்டுமே சிறிதுநேரம் பொழிந் தது. இந்நிலையில், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ஆலாங் காட்டுப்புதூர், கடுக்காம்பாளையம், பரமக்காட்டூர் மற்றும் குட்டியாக்க வுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றினால், இப்ப குதியில் பயிரிடப்பட்டிருந்த, 15 நாட் களில் அறுவடை செய்யவிருந்த மொந்தன், கதளி, தேன்கதிர், பூவாழை மற்றும் செவ்வாழைகள் என 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சூறாவளிக்காற்றினால் வாழைகள் சேதமடைவதும், அதனை வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இது வரை தமிழக அரசு சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடுகள் வழங் கப்படவில்லை. எனவே தனிநபர் பயிர்காப்பீட்டுத் திட்டதை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும். ஏற்கனவே கடந்த இரு மாதங் களாக அறுவடை செய்யப்பட்ட வாழைகள் கொரோனா நோய் தொற் றினால் ஏற்பட்ட ஊரடங்கால் வாழைப் பழங்கள்,இலைகள் ஆகி யன விற்பனையில்லாமல் நாங்கள் பெரும் இழப்பீட்டை சந்தித்தோம். இருந்தும், இந்த வாரம் முதல் நல்ல விலை போகும் என நம்பி இருந்த நிலையில் சூறாவளிக்காற்று மொத்த மாக அனைத்து வாழைகளையும் அழித்துச் சென்றதால் எங்கள் வாழ் வாதாரமே முழுவதும் பாதிப்படைந் துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர்.