சேலம், பிப். 26- சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தாமதமாக வந்த அதிமுக எம்எல்ஏ வால், மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பரிதவித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2,398 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பில் 473 மாணவிகளுக்கு புதனன்று அரசின் விலை யில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இதனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் கலந்து கொண்டு விலை யில்லா சைக்கிள்கள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு 9 மணிக்கே மாணவிகள் பள்ளிக்கு வந்திருந் தனர். இந்நிலையில் 10 மணிக்கு நடை பெறும் விழாவிற்கு வரவேண்டிய சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்தம்பியும், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங் கோவனும் மதியம் ஒரு மணி அளவில் பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். மேலும் அரசின் சாதனைகளை பேசுவ தாக கூறி அரை மணி நேரத்திற்கும் மேலாக மாணவிகளை வெயிலில் நிற்க வைத்து சிறப்பு அழைப்பாளர்கள் பேசிக் கொண்டி ருந்தனர். இவ்வாறு பள்ளி மாணவிகளை பலமணிநேரம் வெயிலில் காய வைத்த சம்பவம் மாணவிகளிடமும், பெற்றோ ரிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.