tamilnadu

img

மெகபூபா மகள் இல்திஜா முப்தி குற்றச்சாட்டு பாதுகாப்புப் படையினர் என்னை துன்புறுத்துகின்றனர்..

ஸ்ரீநகர், ஜன. 25- பாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக பூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு உரிமை களைப் பறித்த மோடி அரசு, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலை வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசி யல் கட்சித் தலைவர்களை கடந்த 6 மாதமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. மெகபூபா முப்தியின்  மகளான இல்திஜா முப்தியும் காஷ் மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறப்புப் பாதுகாப்புப் படையினரால் (எஸ்எஸ்ஜி) நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். எஸ்எஸ்ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி., உளவுத் துறை, சிஐடி போலீ சார் ஆகியோர் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாது காப்பு என்ற பெயரில் எனது சுதந்தி ரத்துக்கான உரிமை பறிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். “நாட்டில் பல தீவிரமான பிரச்ச னைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய உள்துறை அமைச்சகம் கவ னம் செலுத்த வேண்டும். அதற்கு பதி லாக, என்னைப் போன்றவர்க ளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவ காரங்களில் மக்கள் வரிப்ப ணத்தை வீணடிக்கக் கூடாது” என்றும் இல்டிஜா சாடியுள்ளார்.

;