ஈரோடு,ஆக.26- மாநில அளவில் சதை சிதைவு நோயாளிகள் எண் ணிக்கை அதிகரிக்கும் நிலை யில், அவர்களுக்கு இலவச மருந்து உதவிகள் வழங்க வேண்டும் எனக்கோரி, ஈரோடு ஆட்சியர் சி.கதிர வன் மூலம் பாதிக்கப்பட் டவர் அரசுக்கு கோரிக்கை மனு வழங்கினார். ஈரோடு, வீரப்பன்சத் திரத்தை சேர்ந்தவர் எம்.ராஜா (29). இவர் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள் ளார். இவருக்கு கடந்த பத் தாண்டுக்கு முன், சதை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டு, உடலில் பல பாகங்களுக்கு பரவுவதுடன், அவரது செயல்பாடு முடங்கி வருகிறது. இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு வழங்கி னார். இதன்பின் அவர் கூறுகையில், கடந்த பத்து ஆண்டாக சதை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் சிகிச்சைக்கு செல்லும் இடங்கள் மூலம் இந்நோய் பாதித்த, பல ஆயிரம் பேரை கண் டுள்ளேன். அவர்கள் அனை வரும் இளம் வயதில் ஆரோக்கியமாக வாழ்ந்து, திடீரென பாதிக்கப்படு கின்றனர். இதற்கு முறை யான சிகிச்சை, மருந்து, தொடர் சிகிச்சைக்கு வழி இல்லை. ஒவ்வொரு டி.என்.ஏ., பரிசோத னைக்கும், ரூ.15 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. இந் நோய்க்கு உரிய மருந்து இல்லாததால், உடலில் சத்து ஏற்படுவதற்கான மருந்துகளே வழங்குகின் றனர். வெளிநாடுகளில், இதற்கான மருந்துகள் கிடைக்கிறது. அவற்றை வாங்கி அரசு இலவசமாக வழங்கி எங்களது சிகிச்சை, பரிசோதனைக்கு உதவ வேண்டும். மேலும்,எங்களுக்கு தகுந்த பணிகளில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்நோய் வராமல் தடுக்கவும், வந்தவர்க ளுக்கான கிசிச்சை, உதவிகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.