tamilnadu

இ-சேவை மையத்தில் இயந்திரக் கோளாறு

ஈரோடு, ஜூலை 9- பவானி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் இயந்திரக் கோளாரால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா அலுவலக வளா கத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வரு கிறது. இங்கு ஆதார், சாதிச் சான்று, ரேசன்கார்டு, சிட்டா,  ஆர்.எஸ்.ஆர், திருமண உதவித்தொகை, வாரிசுசான்று,  வருமானச்சான்று போன்ற மக்களுக்கு தேவையான  ஆவணங்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கப் படுகிறது. இந்த இ-சேவை மையத்தில் உள்ள இயந்திரம் கடந்த  15 நாட்களாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் வந்து ஏமாற்றத் துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள இயந்திரத்தை சரி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.