tamilnadu

img

காற்றாலை மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் தோட்டத்தில் அனுமதியின்றி அளவீடு

திருப்பூர், நவ. 11- திருப்பூர் அருகே காந்தக்கோட்டை விவசாயிகள் தோட்டத்தில் அனுமதி யின்றி காற்றாலை இரட்டை மின் கோபுரம் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதைக் கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி யிலிருந்து 5 கிமீ தொலைவில் ஸ்பிரிங் எனர்ஜி என்ற தனியாருக்கு சொந்தமான காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காற்றின் மூலம் சுழலும் விசிறிகளிலிருந்து மின்சா ரம் பெற்று, ஆறு லைன் கொண்ட மின் கம்பிகள் வழியாக இரட்டை மின் கம்பங்கள் அமைத்து கொண்டு சென்று நொச்சிவலசு என்ற ஊரில் மின்சாரத்தை சேமிக்கின்றனர். இந்நிலையில், மொங்கநல்லாம் பாளையத்தில் இடைகால்பட்டி செல் லும் சாலையில் சுப்பிரமணியன் என்ப வருக்கு சொந்தமான தோட்டத்தில் எந் தவிதமான அனுமதியின்றி  இரட்டை மின் கோபுரம் அமைப்பதற்காக அளவி டும் பணியில் இந்நிறுவன ஊழியர் கள் ஈடுபட்டனர். இதனைத்தொ டர்ந்து  அருகில் உள்ள விவசாயி கள் ஒன்று சேர்ந்து அளவிடும் பணி யினை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாய நிலங் களுக்குள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாது. இந்த வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படும் போது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு இரட்டை மின்கோபுரம் அமைக்கும் பணியைத்  தடுக்கக் கோரி விவசாயிகள் திங்களன்று மனு அளித் தனர்.