tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி நிவாரண உதவி சேகரிப்பு

திருப்பூர், ஆக. 13 – மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் செவ்வா யன்று நிவாரணப் பொருட்கள் மற் றும் நிதி சேகரிக்கும் இயக்கம் நடத் தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள் நகர, கிராம மக்களை நேரடியாக சந்தித்து நிவாரண வசூலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஐந்து இடைக்குழுக்கள் சார்பில் பெருமாநல்லூர் சாலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புஷ்பா தியேட்டர் வரை உள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், எம்.ராஜகோபால், வேலம் பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால் உள்பட மாவட்டக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இது தவிர நகரின் வார்டுகள் மற் றும் கிராமப்புறங்களில் அந்தந்த பகுதி அளவிலும் நிவாரணப் பொருட் கள் சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட் டது. இதில் கட்சி அணியினர் செங்கொ டியுடன் வீடுகளில் பொது மக்களை யும், கடை வீதிகளில் வர்த்தகர்கள், வியாபாரிகளைச் சந்தித்தும் நிதி திரட்டினர். பெருமாநல்லூரில் கட்சியின் ஒன் றியக்குழு உறுப்பினர் வி.பி.சாமி நாதன், ரங்கசாமி, சிவலிங்கம், சுப்பி ரமணியம், க.சண்முகம் உள்ளிட்டோர் வசூலில் ஈடுபட்டனர். இதில் ரூ.8120 நிதி சேகரிக்கப்பட்டது.