tamilnadu

img

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

 ஒவ்வொரு வருடமும் உலக தன்ணீர் தினம் மார்ச் 22 அன்று அனு சரிக்கப்படுகிறது. தண்ணீரை சேமிப்பதும், நீர் நிலைகளை பாதுகாப்பதுமே இந்த தினம் அனுசரிப்பதன் முக்கியமான நோக்கமாகும். வாழும் ஒவ்வொரு உயி ரினத்திற்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும். நமக்குக் குடிக்க, சமைக்க, சுத்தம் செய்ய மற்றும் குளிக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயம், தொழிற் சாலைகள் மற்றும் படகு, கப்பல் போக்குவரத்திற்கும் இந்த இயற்கை வளம் நமக்குத் தேவைப்படுகிறது. பூமியில் 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால்  அது `நீல கிரகம்’ என அழைக்கப்படுகிறது.  பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்தாலும் ஒரு சதவிகித அளவு தண்ணீர்தான் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மீதியுள்ள தண்ணீரெல்லாம் கடலில் உப்புத் தண்ணீராகவோ அல்லது உறைந்த பனிக்கட்டிகளாகவோ உள்ளன.   மக்கள் தொகை அதிகரித்து வருவதால்  இந்த குறைவான அளவுள்ள நீர் வளத் திற்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை என்கிற பிரச் சனை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் எதிர்கொள்ளப்பட்டு வருகி றது.

நாம் இதை விவேகத்துடன் பயன் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் சரியான நேரம் இது. அப்பொழு துதான் எதிர்காலத்தில் ஒவ்வொருவருக்கும் இந்த அரிய வளம் போதுமான அளவிற்கு கிடைக்கும். மனிதனின் உடலிலும் 75 சதவிகிதம் நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் , கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசி யமாகிறது. ஒரு மனிதனின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது. அதில் 2.7 லிட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் (Dehydration)  உடலில் எரிச்சல்,  நடுக்கம்,  தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது. தண்ணீரானது பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கிய மான மூலப்பொருளாகும். பெருகி வரும் மக்கள் தொகை என்பது ஒருபுறம் இருக்க தொழில் புரட்சியினால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. மூன்றாம் உலகப்போர் மூள்வதாக இருந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும்.

நிலத்தடி நீர்:
நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். ஒரு கால கட்டத்தில் ஆறுகளில், வாய்க்கால்களில் பார்த்த தண்ணீரை இன்று பார்ப்பது என்பது அரிதாகவே உள்ளது. நிலத்தடி நீர் விவசாயத்திற்கு மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது. அத்தகைய நிலத்தடி நீரை அதிகப்படுத்த மழைநீரை சேமிப்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும். நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க உரிய மழை பெய்யும் தருணத்தில் நாம் அந்த மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலமும், அணைகளில் நீரை தேக்கி வைத்து கொள்வதன் மூலமும் நீர்வளத் தேவைகளில் தன்னிறைவு பெற முடியும். மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்து கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு. இன்று இயற்கை சூழலை விட்டு சற்றே நகர்ந்து நகரமய சிந்தனைக்குள் ஆட்பட தொடங்கிவிட்டோம். இப்படியே நாம் நீர்வளத்தின் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால் நிலத்தடி நீரை நாம் முற்றிலு மாக இழக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

வாருங்கள்…சேமிப்போம்..தண்ணீரை…
நீரை சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல, நீர் ஆதாரத்தை பெருக்குவ தும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்மால் இயன்ற அளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத் தினை கடைப்பிடிப்போம். இயன்ற அளவு நீர் நிலைகளை பாதுகாப்போம். நீர் நிலைகளை பாதுகாக்க அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. கோடை காலங்களில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தலாம். நீரின் உபயோகத்தை குறைத்து மறு சுழற்சி முறையில் தேவையற்ற நீரை தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம். நெகிழிப் பொருட்களைப் புறக்கணிப் போம். தென்னை பனையோலை பொருட் களையும், மண்பாண்டம், சில்வர் பாத்தி ரங்களையும் உபயோகிப்போம். காய்கறி கழிவுகளை உரமாக்குவோம். மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தரம் பிரித்து போடுவோம். பள்ளி செல்லும் குழந்தைகளிடம் நீரின் முக்கியத்துவத்தையும், அதை பயன்படுத்தும் முறை மற்றும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும். கண்டிப்பாக எடுத்துக் கூற வேண்டும். கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மூடப்பட்டு மனித குடியிருப்புகளாய் மாறிவரும் இவ்வேளையில் நம் வருங்கால சந்ததியினர் இவற்றையெல்லாம் (கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள்) வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

தண்ணீர் சேமிப்பு முறை:
தண்ணீர் சேமிப்பு முறை என்பது வருடத்திற்கு ஒரு சில நாட்கள் என  வழக்கமாக இல்லாமல், தினந்தோறும் கடைப்பிடிக்க பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டு தான் செல்கிறது. அதை சரியாகப் புரிந்து கொள்ள நாம் தாம் தவறிவிட்டோம். இன்று உள்ள இந்த அபாயகரமான சூழ்நிலை ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. சிறிது சிறிதாக சேர்ந்து பூதாகரமாக மாறி நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதை மாற்றும் சக்தியும், திறமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. நம்முடைய முன்னோர்கள் நாம் வாழ்வதற்கு பசுமையான சூழலை நமக்கு அளித்து சென்றார்கள். ஆனால் நாம் நம்முடைய எதிர்கால தலைமுறைக்கு எத்தகைய வாழ்வியல் சூழலை விட்டுவிட்டு செல்லப்போகிறோம். அதற்கான முயற்சியை இன்றே தொடங்குவோம். உலக தண்ணீர் தினத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்வோம். இதை அனைவருக்கும் எடுத்துக் கூறுவோம். ஒவ்வொரு நாளும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமிப்போம். சிறுதுளி பெரு வெள்ளம்! மழை நீரை சேகரிப்போம் ! நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் ! மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்! 

கு.கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்,      

 கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை.