tamilnadu

img

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மாவோயிஸ்ட் தீபக் கைது

கோவை, நவ.22- கோவையில் தமிழ் நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினரால் கைது செய் யப்பட்ட மாவோயிஸ்ட்  தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல் லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப் பாக்கியுடன் மாவோயிட்ஸ் டுகள் சுற்றி வருவதாக உள வுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப் படை எஸ்.பி. மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டை யில், கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு  அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட்  அமைப்பைச் சேர்ந்தவரான  தீபக் என்பவரை கடந்த நவ.9 ஆம் தேதியன்று துப்பாக்கி முனையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினர் கைது செய்தனர். இதற்கிடையே, கைது செய்யும் பொழுது தீபக்கின் உடலில் காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன் பின் அவர் சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி னர். இந்நிலையில், மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி ஒப்புதலின்படி இப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.