tamilnadu

img

வறட்சியால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல், ஜூன் 9- திருச்செங்கோடு அருகே மல்லசமுத்தி ரம், திம்மிபாளையம், எலச்சிபாளையம், பூவாலைகுட்டை ஆகிய பகுதிகளில் கடும்  வறட்சியின் காரணமாக 20 ஆண்டுகால மாக வளர்ந்து வந்த தென்னை மரங்கள் கருகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 10.25 மீட்டர் அகலத்தில் இருந் தது. அது தற்போது 11.48 மீட்டர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அளவில் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றிய பகுதிகளில் 2,441 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அவற்றில் கடந்த சில மாதங்களாக 543 ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு விட்டது. இதேபோல், 4,400 ஆழ்துளை கிணறு களிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  கடந்த 6 மாதங்களில் 400 ஆழ்துளைக்  கிணறுகள் வறண்டு விட்டன. நகராட்சி  மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சேர்த்தால் மொத்தம் 30 சதவிகிதம் வரை ஆழ்துளை  கிணறுகள் வறண்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாமக்கல், திருச்செங்கோடு, எலச்சிபாளையம்,  மல்லசமுத்திரம், கபி லர்மலை,  மோகனூர் ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் சராசரி அளவை காட்டிலும் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. மீதமுள்ள 15 ஆண்டு களில் சராசரியைக் காட்டிலும் குறைவா கவே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு  இதுவரை 28 மில்லி மீட்டர் மழை பெய் துள்ளது. இதனால் நாமக்கல் மாவட் டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க மேட்டூர் அணை யின் நீரை திருமணிமுத்தாறு வழியாக திருப்பி விட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் நிரப்பினால் மட்டுமே இம்மாவட் டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்பதே இங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், மாமரங்கள் உள்ளிட்ட மரங்கள் கடும் வெயிலின் காரணமாகக் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது.  இதுகுறித்து  எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர்  பி.மாரிமுத்து கூறியதாவது, தொடர்ந்து 15 ஆண்டு காலமாக விவசாயிகளின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. திரு மணி முத்தாற்றில் காவிரி நீரை இணைக் கும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். வெயில் தாக்கத்தினால் அதிகமாக காய்ந்து கருகிப் போன தென்னை மரங்க ளுக்கு  நஷ்டஈடு உரிய நேரத்தில் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும்  நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். பழு தடைந்த குடிநீர் மோட்டார்களை சரி செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.