tamilnadu

ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து எந்திரங்கள்

வேலூர், ஜூலை 1- ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து எலக்ட்ரிக்கல் எந்தி ரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகை யில் சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆய்வுப் பணிகள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. அப்போது மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3.5 கிமீ தூரம்  உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே ரயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக கோவையில் இருந்து நீரேற்  றும் எலக்ட்ரிக்கல் எந்திரங்கள் கொண்டு  வரப்பட்டது. அதன் மூலம் மேட்டுசக்கர குப்பம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீர் எடுத்து செல்லப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீரேற்றும் எந்திரங்கள் ரயில்வே துறை சார்பில் பொருத்தப்படும். ரயில்வே தண்ட வாளத்திற்கு அடியில் சுமார் 800 மீட்டர் தூர மும், மற்ற பகுதியில் 2,400 மீட்டர் தூரமும் குழாய்கள் பதிக்கப்படும், இப்பணி விரைந்து  முடிக்கப்பட்டு, வருகிற 10ஆம் தேதிக்குள்  சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்படும்,” என்றனர்.