திருப்பூர், ஆக. 7– திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் போராட்டத்தின்போது நிர்வாகிகள் 10 பேர் மீது காவல் துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொய் வழக்கைத் தள்ளுபடி செய்து சங்க நிர்வா கிகளை விடுவித்தது. சத்துணவு ஊழியா் சங்கத்தின் சார்பில் ஊழி யர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன் வைத்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து ணவு மானியத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி மாநிலந்தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி முன்பாக சத்துணவு ஊழி யர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் காவல் துறை அத்துமீறி தலையிட்டு, அரசு ஊழி யா் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளா் ஆ.அம்சராஜ் மற்றும் சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநகரத் தலைவா் மகேந்தர பூபதி மற்றும் சுப்புலட் சுமி, சரஸ்வதி, மயிலாள், ஜோதிலட்சுமி, வளா்மதி, ராஜம்மாள், அமிர்தவள்ளி, செயலாளா் ஆதிலட்சுமி ஆகிய 10 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தது. சட்டரீதியாக இந்த வழக்கைச் சந்திப்பது என்று சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு செய்தது. இந்த வழக்கு திருப்பூா் நடுவா் நீதிமன்றம் எண் 2இல் நடைபெற்று வந்தது. அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் வழக்கறி ஞா் எஸ்.பொன்ராம், வழக்கறிஞர் நந்தகுமார் ஆகி யோர் ஊழியர் சங்க நிர்வாகிகள் தரப்பில் ஆஜரா னார்கள். வழக்கு விசாரணை முடிவடைந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி செவ்வாயன்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் மேற்படி ஊழியா்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கு பொய்யானவை என தள்ளுபடி செய்து, இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் ஆக.6ஆம் தேதி செவ்வாயன்று விடுவிக்கப்பட்டனர். வழக்கில் இருந்து விடுதலையான சங்க நிர்வா கிகள், ஊழியா்களை அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் ராமன் மற்றும் சத்துணவு ஊழியா் சங்கம் மாவட்ட செயலாளா் ஆா்.ராமசாமி, இணை செயலாளா் கே.ஆா்.நாகராஜன், மாவட்ட பொருளாளா் கே.கருணாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.