tamilnadu

img

உழைப்பவர் உரிமையை மீட்க உரத்த குரல் எழுப்புவோம்

கோவை, ஆக. 25 -  போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து ஒன்றுபட்டு உரத்த குரல் எழுப்பி உழைப்பவர்களின் உரிமையை மீட் போம் என்கிற எழுச்சி முழக்கத்தோடு சிஐடியு கோவை மாவட்ட மாநாடு அறைகூவல் விடுத்தது.  இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு)12 ஆவது கோவை மாவட்ட மாநாடு துடியலூர் கிருஷ்ணா மஹாலில் ஞாயிறன்று மாவட்ட தலை வர் சி.பத்மநாபன் தலைமையில் துவங்கியது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியக்குழு செயலா ளர் என்.பாலமூர்த்தி மாநாட்டு கொடியை எடுத்துக்கொடுக்க சிஐடியு  மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.  தியாகிகள் ஜோதியை சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் எடுத்துக்கொடுக்க சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி.கே.சுகுமாறன் பெற்றுக்கொண்டார். மாவட்ட துணை தலைவர் எம்.ஏ.பாபு எழுச்சி முழக்கங்களுக்கிடையே மாநாட்டு செங்கொடி ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை எஸ்.மூர்த்தி முன்மொழிந்தார். மாநாட்டு வரவேற் புக்குழு தலைவர் ஆர்.கேசவமணி வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாநில தலை வர் அ.சவுந்தரராசன் எழுச்சிமிகு துவக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாநாட்டு அறிக்கையை சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகியோர் முன்வைத்தனர். அறிக்கையின் மீது மாநாட்டு பிரதிநிதிகள் விவாதத்தை துவக்கினர். மாநாடு தொடர்ந்து திங்களன்று நடைபெற உள்ளது.  முன்னதாக மாநாட்டில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணை தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். 

செஞ்சட்டை பேரணி  - பொதுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து துடியலூர் கிருஷ்ணா மஹால் மாநாட்டு அரங்கி லிருந்து துவங்கிய உழைப்பாளர் பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று துடியலூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத் தில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்த ரராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமா றன், மாநில துணை தலைவர்கள் எம்.சந்திரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், எம்.கிரிஜா, எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். முடிவில் ஆர்.கேசவமணி நன்றி கூறினார். முன்னதாக பேரணி பொதுக்கூட் டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி ஊழியர்கள், மக்கள் நலக்கோரிக் கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பி பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்திற்கு முன் உடுமலை துரையரசன் குழுவி னரின் மக்களிசை பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.