ஏற்காடு, பிப். 3- சேலம் அருகே ஏற்காட்டில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில், தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி ஞாயிறன்று தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு வட்டார மருத்து அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். மேலும், ஏற்காடு பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணியானது காந்தி பூங்கா, கடை வீதி, காவல் நிலையம், புனித ஜோசப் பள்ளி, நசரேத் பள்ளி உள்ளிட்ட பகுதிகளை கடந்து கோவில் மேடு பகுதியில் நிறைவடைந்தது. இதில், தரன் கல்லூரியின் சுகாதார ஆய்வாளர், பயிற்சி மாணவர்கள் பேரணியில் பங்கேற்று தொழுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் வராமல் பாதுகாத்துக் கொள்வதற் கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங் கினர். மேலும், வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.