மேட்டுப்பாளையம், பிப். 18- ஊருக்குள் புகுந்து கால்நடை களை வேட்டையடும் சிறுத்தைகள், வனத்துறையினர் வைத்த கூண்டு களுக்குள் சிக்காமல் அங்கேயே சுற்றிதிரிவதால் மலையடிவாரத் தில் உள்ள கிராமமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தை அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் உள்ள மலையடிவார கிராமங்களில் கடந்த இரு வார கால மாக சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. சம்மரவள்ளிபு தூர், பெரிய தோட்டம், பெத்திக் குட்டை, கோவில்மேடு, தேங்கல்க ரடு ஆகிய கிராமங்கள் வனத்தை யொட்டியுள்ள மலையடிவாரத்தில் உள்ளது. இக்கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் சிறுத் தைகள், அங்குள்ள தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளை வேட்டையாடி கொன்று விடுகின்றன. கால்நடைகள் கொல் லப்படும் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், இரவு மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட சிறுத்தைகள் நட மாடுவதை கண்ட கிராமமக்கள் அச் சத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து பெரி யத்தோட்டம் மற்றும் சம்மரவள் ளிபுதூர் என இரு கிராமங்களில் கூண்டுகளை வைத்தனர். மலைக் காட்டை விட்டு சிறுத்தைகள் வெளி யேறும் பகுதியில் அடர்ந்த புதர்க ளுக்கு நடுவே இந்த கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கூண்டு வைத்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தை கள் சிக்கவில்லை. கூண்டு வைக்கப் பட்டுள்ள இடத்தை சுற்றியே சிறுத் தைகள் தொடர்ந்து நடமாடி வரு வதாகவும், இதனால் தங்களது விவசாய பணிக்காக தோட்டங்க ளுக்கு செல்ல முடியவில்லை என வேதைனைப்படும் இப்பகுதி கிராம மக்கள், இருள் சூழ்ந்த பின்னர் வீட்டை விட்டு வெளியில் வரவேண் டாம், பகலில் கூட குழந்தைகளை வெளியில் விடவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து வருவ தால் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள னர். வாழைத்தோட்டங்களிலும், கீரை தோட்டங்களுக்குள்ளும் பகல் நேரத்தில் கூட சிறுத்தைகளை காண முடிகிறது என அச்சத்தோடு கூறும் இப்பகுதி கிராம மக்கள், தங்களை யும் தங்களது வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளையும் காப் பாற்ற உடனடியாக சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதி காரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “சிறுத்தைகளின் நட மாட்டத்தை தொடர்ந்து கண்கா ணித்து வருவதாகவும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தைகள் அதனுள் நுழையாமல் இருப்பதால் அவற்றை பிடிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும்” என்றனர்.