tamilnadu

img

ஆடுகளை தாக்கிய சிறுத்தை- கிராம மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம், பிப்.28- மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சின்னக்கள்ளிப்பட்டி என்னும் கிரா மத்தில் இயங்கி வரும் மது நோயா ளிகள் மறுவாழ்வு மையத்தினுள் நுழைந்த சிறுத்தை அங்குள்ள மூன்று ஆடுகளை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மலையடி வார கிராமங்களில் கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக சிறுத்தை கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  இரவு நேரங்களில் ஊருக்குள் நுழை யும் சிறுத்தைகள் விவசாயத் தோட் டங்களில் கட்டி வைக்கபட்டிருக்கும் ஆடு மற்றும் மாடுகளை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், சின்னக்கள்ளிப் பட்டி கிராமத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மது நோயாளிகள் மறுவாழ்வு மைதினுள் நுழைந்த கருஞ்சிறுத்தையொன்று அங்கிருந்த ஆடுகளை கொன் றுள்ளது. மனிதர்கள் நடமாட்டம் அதிகமிருந்த வேலையிலும் சிறுத்தை  நுழைந்து ஆடுகளை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.  இதுகுறித்து வனத்துறை அதி காரிகளிடம் கேட்ட போது, “சிறுமு கைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்தி ரியும் சிறுத்தைகளை பிடிக்க ஏற்கனவே இரு இடங்களில் கூண்டு கள் வைத்துள்ள போதிலும் இதுவரை சிறுத்தைகள் சிக்கவில்லை. தற்போது சின்னகள்ளிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப் பட்டுள்ளதால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற னர். அதேநேரம் பெரும் அச்சுறுத்த லாக உள்ள சிறுத்தைகளை உடனடி யாக பிடிக்கவும் அதன் நடமாட் டத்தை கண்காணிக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.