tamilnadu

img

சாதி ஆணவக்கொலையை தடுக்க சட்டம் இயற்றிடுக

கோவை, ஜுலை 11 –   சாதி ஆணவப் படுகொலையை தடுக்க உடனடியாக தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலை கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் வர்சினி பிரியா, கனகராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத் திற்கு தலைகுனிவை எற்படுத்துகிற இந்த இழிநிலையை கண்டித்தும்,   சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சாதி ஆணவப்படு கொலைகளை தடுக்க நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரிலேயே தனிச்சட்டம் இயற்ற வேணடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கி னார். இதில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமி ழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை  ரவிக்குமார் உள்ளிட்டோர்  உரையாற்றி னர். போராட்ட நோக்கங்கங்கள் குறித்து அமைப்பின் நிறுவனர் அதியமான் நிறை வுரையாற்றினார். முன்னதாக, இந்த ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஆணவ படுகொலைக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.