தாராபுரம், ஜூலை 14- தாராபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் சிவரஞ்சனி திருமண மகாலில் ஞாயிறன்று துவக்க விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு 23ஆவது இலவச பயிற்சி மைய துவக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சி மையம் தமிழகத்தில் 22 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தாரா புரம் நகரில் ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மைய துவக்க விழாவில் தாராபுரம் நகராட்சி ஆணையர் இரா. லட்சுமணன் வாழ்த்துரையில் கூறிய தாவது, பயிற்சி மையத்தில் எதற்காக படிக்க வேண்டும்? நாங்கள்தான் வீட்டிலிருந்தே கடினமாக முயற்சி செய்து படித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு இருக்கையில் ஏன் பயிற்சி மையத்தில் சேர வேண்டும் என நீங்கள் நினைக் கலாம். ஆனால் வீட்டிலிருந்தபடியே கடினமாக முயற்சி செய்து படித்தாலும், வெற்றியை நூலிழையில் தவற விட்டவர்கள் ஏராளம். இதற்கு என்ன காரணம்? வீட்டில் இருந்தாலும் படிப்பதுதான், பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பது தான். ஆனால், பயிற்சி மையத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கு தேவையான பல நுணுக்கங்களை எளிமையான வழி முறைகளை கற்றுத் தருவார்கள். இதன் மூலம் நாம் மேலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைய பயனுள்ள தாக அமையும். எனவே பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன டைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரி வித்தார். முன்னதாக பயிற்சி மையத் துவக்க விழாவிற்கு சீரங்க ராயன் தலைமை தாங்கினார். பால்ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செல்லத்துரை, முருகதாஸ், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் உதயகுமார், பிஷப் கல்லூரி முதல்வர் நடராஜன், நந்த கோபால், குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். இப்பயிற்சி மையத்தில் வகுப்புகள் வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியார் சிலை எதிரில் உள்ள எஸ்பிகே வெஜிடபிள் மேல்மாடியில் நடைபெறும்.