கோவை, செப். 9 – கேரளா மாநில தங்க கடத்தல் விவகா ரத்தில் கோவை கருப்ப கவுண்டர் வீதி அருகில் உள்ள நகை பட்டறை உரிமையா ளருக்கு ஏதேனும், தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தில் இருந்து கேரளா விலுள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு, சுங்க இலாகா அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
. இந்த நிலையில், கோவை கருப்ப கவுண்டர் வீதியில் வசித்து வரும் நகை பட்டறை உரிமையாளர் நந்தகோபால் என்பவருக்கு, இந்த வழக்கில் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரி கள், புதனன்று அவரது வீடு மற்றும் நகை பட்டறையில் சோதனை மேற்கொண்ட னர்.
மாவட்ட காவல் துணைக் கண்காணிப் பாளர் சாகுல் அமீது தலைமையிலான நான்கு அதிகாரிகள் கொண்ட குழுவினர், காலை 6 மணி முதல் சோதனையில் ஈடு பட்டனர்.
இதில், கேரளாவிலிருந்து நந்தகோ பாலின் நகை பட்டறைக்கு தங்கம் கை மாற்றப்பட்டதா? விற்கப்பட்டதா? அல்லது ஆபரணங்கள் செய்து மீண்டும் கேரளா வுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கோணங்க ளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.