tamilnadu

img

சிறுமிகள், பெண்களிடம் பாலியல் வக்கிரம் பாடகி சின்மயியையும் மிரட்டிய காசி

சமூக ஊடகங்களில் அம்பலமாகும் சான்றுகள்

நாகர்கோவில், மே 5- சிறுமிகளுடனான தனது பாலி யல் வல்லுறவை குற்ற உணர்வே இல்லாமல் துணிந்து சமூக வலை தளங்களில் காசி என்கிற சுஜி பதி விட்டுள்ளார். இது குறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி ஒரு காணொலி பதிவை வெளியிட்டுள் ளார். அதில் காசி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கான்வென்டில் படிக்கும் மாணவிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளதாக சமூக ஊட கத்தில் பதிவிட்டுள்ளதன் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து நாகர்கோவில் வழக்கறிஞர் மரிய ஸ்டீபன் கூறு கையில், காசியின் இந்த ஊடக பதி வுகளே அசைக்க முடியாத ஆவண மாகும். இதன் அடிப்படையில் அவரது வாக்குமூலத்தைப் பெற முடி யும். அதன்படி பாதிக்கப்பட்ட சிறுமி களை போக்சோ சட்ட வழிகாட்டலை பின்பற்றி விசாரிக்க வேண்டும் என்றார். மாதர் சங்கம் அளித்துள்ள புகார் மனுவில், 2016 ஆம் ஆண்டு நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்து காசியை எச்சரிக்கை செய்து அனுப்பியது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுமார் 80 பெண் கள் வரை காசியின் தொடர்பில் இருந்தது அவரிடமிருந்து கைப் பற்றப்பட்ட செல்பேசி மற்றும் மடிக்கணினி மூலம் தெரிய வந்துள்ள தாக சைபர் கிரைம் காவல்துறை யினர் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு பொள்ளாச்சி பாலி யல் குற்றவாளிகளுக்கு சாதகமான ஒரு காணொலியை சமூக ஊட கத்தில் காசி வெளியிட்டிருந்தார். அதில், வீட்டில் வளரும் கன்னுக் குட்டி ரோட்டுக்குத்தான் வருவேன் என்று வந்தால் லாரியில் அடிபட்டு சாகத்தான் செய்யும்’ என தெரிவித்தி ருந்தார். இதற்கு எதிராக பிரபல பாடகி சின்மயி ஒரு பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்டதாகவும், பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டு காசி மீது புகார் தெரி வித்ததாகவும் தற்போது ஒரு காணொ லியை வெளியிட்டுள்ளார். அப் போதே காவல்துறையில் புகார் அளிக்குமாறு அவர் கூறியும் யாரும் முன்வரவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.  தன்னையும் சமூக ஊடகத்தின் மூலம் சுஜி டெமோ என்கிற பெயரில் காசி மிரட்டியதாக சின்மயி தெரிவித்துள்ளார், தனக்கு அரசியல், காவல்துறை தொடர்புகள் உள்ளதாகவும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடி யாது என்று துணிச்சலாக பதிவிட்ட தாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். 

அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் உஷா பாசி கூறுகை யில், காசியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி காசியின் பாலியல் தொ டர்புகளையும், கூட்டாளிகளையும் காவல்துறை கண்டறிய வேண்டும். மாவட்ட காவல்துறை உரிய முறை யில் விசாரணையை முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால், வெளி மாநிலங்களிலும் நிகழும் பாலியல் தொடர்புகளை கண்டறியவும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவும் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மத்திய குற்றப்பிரிவின் (சிபிஐ) புலன் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார்.  

காசியின் பாஜக தொடர்பு

காசி தனது முகநூல் பதிவுகளில் பாஜகவைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார். மத்திய- மாநில ஆளும் கட்சி பிரமுகர்களோடு தொ டர்பில் உள்ளதாகவும், பல புகைப் படங்களில் வழக்கறிஞர் ஹரி இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளி யிட்டிருந்த ஒரு அறிக்கையில் காசி என்கிற சுஜிக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தி ருந்தார். ஆனால், திங்களன்று நாகர் கோவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட காசி காவி வேட்டியுடனும் அதே நிறத்தில் முக கவசமும் அணிந்திருந்தார்.