tamilnadu

கனகராஜ், வர்ஷினிபிரியா ஆணவக்கொலை வழக்கில் மேலும் மூன்றுபேர் கைது

கோவை, ஜூன் 30- மேட்டுப்பாளையத்தில் சாதிய ஆதிக்க வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவின் காதலுக்கு எதிர்ப் புத் தெரிவித்து, சாதிய வெறியோடு கனக ராஜை சொந்த சகோதரரே ஆணவப் படு கொலை செய்தார். பின்னர், மேட்டுப் பாளையம் காவல்நிலையத்தில் சரண டைந்த வினோத் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வர்ஷினி பிரி யாவும் ஆணவக் கொலை வெறித்தாக்கு தலில் படுகாயங்களுடன் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரி ழந்தார்.  இந்நிலையில், ஆணவப் படுகொலை சம்பவத்தில் மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பதாக வர்ஷினி பிரியாவின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜயப்பன், கந்தவேல், சின்னராஜ் ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.