tamilnadu

img

பிஎஸ்என்எல்-ஐ மூடப்போவதாக பொய் பரப்பி கடை விரிக்கும் ஜியோவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 5 - பிஎஸ்என்எல் நிறுவ னத்தை மூடப் போவதாக பகிரங்கமாக பொய்யைப் பரப்பி கடை விரிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைக் கண்டித்து வெள்ளியன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான ஜியோ  நிறுவனம் சார்பில் நாட்டின்  பல்வேறு பகுதிகளில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, குறிப்பாக  பிஎஸ்என்எல் சந்தாதாரர் களை ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடப் போவ தாகவும், எனவே அதன் வாடிக்கை யாளர்கள் தங்கள் நிறுவன சேவையைப் பெறுமாறும் பல இடங்களில் பகிரங்கமாக முகாம் நடத்துவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான நடவ டிக்கை மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிர் வாகம் தீர்மானித்துள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் பிஎஸ்என்எல் நிறுவ னத்தை மூடப்போவதாக பரப்பப்பட்ட வதந்தியையும் பிஎஸ்என்எல் நிர்வாகமும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் புள்ளி விபரங்களுடன் மறுத்துவிட்டனர்.  அதன்  பிறகும் வியாபாரத்தை பெருக்கும் நோக் கத்தில் கீழ்த்தரமான முயற்சியை ஜியோ நிறுவனம் மேற்கொண்டிருப்பதற்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு  முழுவதும் பல்வேறு கிளைகளில் ஆர்ப் ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மெயின்  தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளி யன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜியோ நிறுவனத்தின் கீழ்த்தரமான முயற்சியைக் கண்டித்து சங்கத்தின் மாநிலத் துணைச் செய லாளர் எஸ்.சுப்பிரமணியம் உரையாற்றி னார். சங்க கிளை நிர்வாகிகள் குமரவேல், வாலீசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.