கோவை, பிப். 9- கோவை மாவட்டத்தில் பிப். 23ல் ஜல்லிக்கட்டு நடைபெற வுள்ளது. கோவை மாவட்டம், செட்டிபா ளையம் எல்ரூடி பைபாஸ் சாலை யில் உள்ள மைதானத்தில் ஜல்லிக் கட்டு விளையாட்டு விழாவிற்கான கால்கோல் அமைக்கும் விழா நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செய லாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில ஜல்லிக் கட்டு பேரவைத் தலைவர் ராஜசேக ரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் நீண்ட நெடுங்கால மாக நடைபெறாத ஜல்லிக்கட்டு விழாவானது சிறப்பு முயற்சி களால் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடப்பாண் டும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா உரிய பாது காப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பிப்.23 ஆம் தேதியன்று நடை பெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழா விற்கு முன்னதாக தகுதியான காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத் தப்பட்ட பின்னர் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விழா நடை பெறும் மைதானம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பெருமளவில் கண்டுகளிக்க ஏதுவாக போதிய அளவிலான இருக்கை வசதிகளும், விழா நடைபெறும் மைதானத்தை சுற்றி லும் தேவையான உணவு, குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. எனவே, மக்கள் அனைவரும் கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா வினை நேரடியாக வந்து கண்டுக ளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.