உடுமலை, ஆக.17- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லும் மலைப்பாதைகள் தற் போது பெய்த மழையால் கடுமையாக சேதம் அடைத்து உள்ளதை மலைவாழ் மக்களே சரி செய்து வருகின்றனர். உடுமலை வட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் குருமலை, மாவ டாப்பு, குழுப்பட்டி, மேல்குருமலை, பூச்சி கொட்டாம்பாறை, கருமுட்டி, காட்டுபட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டுமலை, பொருப்பாறு, தளிச்சி, தளிச்சி வயல், மூங் கில் பள்ளம் ஆகிய செட்டில்மென்ட் பகுதி களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குருமலை, குழுப்பட்டி, மாவடாப்பு, மேல்குருமலை பகுதிகளுக்கு மக்கள் நடைபாதையாக திருமூர்த்தி மலை அடி வாரப்பகுதியில் இருந்து செல்கின்றனர். மேலும் வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும் என்றால் வால்பாறை செல்லும் வழியில் உள்ள காடம்பாறையில் இருந்து கரடு முரடான மலைப்பாதையில் வழியா கத்தான் வாகனங்களில் செல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது பெய்த மழை யால் மலைப்பாதைகள் அனைத்தும் கடுமை யான சேதமடைந்துள்ளது. இதனால் மருந்து வம் மற்றும் ரேசன் உள்ளிட்ட தங்களு டைய அத்தியாவசிய பொருட்களை வாங்கு வதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் பாதைகளை சரி செய்ய உடுமலை வருவாய் துறை மற்றும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி மலைவாழ் மக்களே மலைப்பாதைகளை சரி செய்து வருகிறார். மலைவாழ் மக்கள் சரிசெய்த பாதையில் தான் தற்போது அரசு ரேசன் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல் லப்படுகிறது. ஆகவே, தற்போது உள்ள பாதையை உடனடியாக தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.