tamilnadu

img

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்து, ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ.26- புறம்போக்கு நிலங்களில் குடியி ருப்போருக்கு பட்டா வழங்குமாறு நாமக்கல், தருமபுரி, சேலம் ஆகிய  மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணை   (எண்.318) படி இலவச குடியிருப்புக் கான பட்டா வழங்க வேண்டும்.  ஏரி, ஓடை, குளம், குட்டைகள் மற்றும் கோவில் மடங்களுக்கு சொந்தமான நிலங்கயில் குடியிருக்கும் ஏழை களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூர்,சேந்தமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சி.துரை சாமி, கே.மோகன், எஸ்.தனபால், குமாரபாளையம் நகர செயலாளர் எஸ். ஆறுமுகம்,பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பள்ளிபாளையம் பிரிவு  ரோட்டில் இருந்து வட்டாட்சியர் அலு வலகம் வரை பேரணியாக சென்றனர்.  ராசிபுரத்தில் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் ராசிபுரம் பகுதி குழு செயலாளர் ஜி. செல்வராஜ், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். ராசிபுரம் முக்கிய வீதிகளின் வழி யாக வட்டாட்சியர் அலுவலகம் வரை  பேரணியா சென்றனர்.  பரமத்தி வேலூரில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ரங்கசாமி, வட்டச் செயலாளர் கே.சண்முகம், வட்ட குழு உறுப்பி னர்கள் ஏ.சந்திரசேகரன், இளங்கோ, கிருஷ்ணன், பொன்னம்பலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  சேந்தமங்கலத்தில் ஒன்றிய செய லாளர் என்.ஜோதி தலைமை வகித் தார்.  மாவட்ட செயற்குழு உறுப் பினர் சு.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சமதர்மன், செல்லம்,குமார சாமி.உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்ட இந்த ஆர்ப்பாட்ட முடிவில்  வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.   

தருமபுரி

குடிமனைப்பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுகொடுக்கும் போராட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  அரூர்,மொரப்பூர் ஒன்றியங்களில் புறம்போக்கு நிலங்களில் தலை முறை தலைமுறையாக வாழ்ந்துவரு பவர்களுக்குமனைப்பட்டா இல் லாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.எனவே புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்  எஸ்.கே.கோவிந்தன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர்  ஏ.குமார்,மாவட்டசெயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.சிசுபாலன்,எம்.முத்து ஒன்றியச்செயலாளர்கள் அரூர் ஆர். மல்லிகா,மொரப்பூர் கே.தங்கராசு, மாவட்டகுழு உறுப்பினர்கள் சி. வேலாயுதம்,பி.வி.மாது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன், பி.குமார்,ஏ.நேரு,டி.வேடியப்பன்,சி.பழனி, ஆர்.செந்தில் ஆகியோர் பேசி னர்.

சேலம்

இதேபோல்  சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள மேற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு மாநகர மேற்கு, சேலம் தாலுகா குழுவினர் உள்ளிட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்திற்கு  மேற்கு மாநகர  செயலாளர் எம். கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட  செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி. பாலகிருஷ்ணன், ஜி.கண்ணன், சேலம்  தாலுகா செயலாளர் ஏ.சுந்தரம், மாநகர  கமிட்டி உறுப்பினர்கள் பி.கணேசன்,  சி.சுந்தரராஜன், வி.பிரகாஷ், சிலம்ப ரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட  பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆட்சியர் அலுவலகம்

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.  இந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட் டக்குழு உறுப்பினர் எம்.முருகேசன்,  மாநகர கமிட்டி உறுப்பினர்கள் வி. வெங்கடேஷ், ஜி.தேவி, ஆர்.வி.கதிர் வேல், வி.முருகானந்தம், பி. ராஜேஷ்குமார், பி.தமிழ்ச்செல்வன், பி.செந்தில்குமார் மற்றும் கிளை செய லாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் 464பேர் தனித் தனியே  விண்ணப்பம் வழங்கி ஒப்புதல்  சீட்டு பெற்றனர். இந்த விண்ணப்பங் களை பெற்றிட தனியாக ஆட்சியர்  அலுவலகத்திலிருந்து மூன்று  அதிகாரிகளை நியமிக்கப்பட் டிருந்தனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்
சேலம் மாநகரம் கிழக்கு கமிட்டி சார்பாக மணியனூர் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிழக்கு மாநகர செயலாளர் பி. ரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. உதயகுமார், எம்.குண சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.வைரமணி, ஏ.கோவிந்தன், மாநகர குழு உறுப்பினர்கள் சம்பத், ஜி.  சுல்தான், ராஜி, திருநாவுக்கரசு, வி. பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

வாழப்பாடி

வாழப்பாடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியினர் வாழப்பாடி பேருந்து நிலை யத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர். குழந்தைவேல், ஒன்றிய செயலாளர் பி.பழனிமுத்து, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அன்பழகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கவேல்,  எம்.கந்தசாமி போக்குவரத்து தொழிலாளர்கள் அன்பழகன், சீனிவாசன், முருகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஓமலூர்

ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் எம். மோகன்  தலைமை தாங்கினார். தாலுகா செய லாளர் பி.அரியா கவுண்டர், தாலுகா குழு உறுப்பினர் சின்னராஜ் உள்ளிட்ட  திரளானோர் கலந்து கொண்டனர். 

மேட்டூர் 

மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு மேட்டூர் கொளத்தூர்  மற்றும் மேச்சேரி இடை குழுகள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் சி.கருப்பண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எ.ராமமூர்த்தி, மேச் சேரி இடைக் குழு செயலாளர் மணி முத்து, இடை குழு உறுப்பினர்கள் ரத்தினவேல், மாது, ஸ்டாலின், அண்ணாதுரை, வேணுகோபால் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். இதில் 333 மனுக்களை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அளித்தனர். 

சங்ககிரி

சங்ககிரி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு இடைக்குழு உறுப்பினர் டி.  செந்தில்குமார் தலைமை தாங்கினார். சங்ககிரி தாலுகா செயலாளர் எஸ்.கே. சேகர், இடைக் குழு உறுப்பினர்கள் ஏ. சீனிவாசன், பானுமதி, ராஜேந்திரன், மாணிக்கம், ஆறுமுகம் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி

கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடைக் குழு  செயலாளர் ஜோதி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே. வெங்கடாசலம், இடைகுழு உறுப்பினர்கள் வெங்க டாசலம், கருத்தாபிள்ளை உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

ஏற்காடு

ஏற்காடு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.நேரு தலைமை தாங்கினார். நகர கிளை செய லாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  2 ஆயிரத் துக்கு மேற்பட்டோர் அந்தந்த தாலுகா  அலுவலகங்கள் முன்பு மனு கொடுக் கும் போராட்டத்தில் கலந்து கொண் டனர்.