tamilnadu

img

தங்கத்தின் அன்றாட விலையேற்றம் – தொழிலாளர்களின் கூலியை குறைப்பதா?

கோவை தங்கநகை தொழிலாளர் வேதனை

கோவை, மார்ச் 17 –  தங்கத்தின் விலை நிலையில் லாமல் நாள்தோறும் ஏறிவருகிற நிலையில்  தொழிலாளர்களின் கூலியை (பர்சென்ட்டேஜ்) குறைத்து அவர்களின் மீது  சுமையை ஏற்றுவதற்கு தங்க நகை தொழிலாளர் யூனியன்  வேதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  சிஐடியு கோவை மாவட்ட தங்கநகை தொழிலாளர் யூனியன் தலைவர் என்.எம்.கண்ணன், பொதுச்செ யலாளர் பி.சந்திரன் ஆகியோர் கோவை ஜூவல்லரி உற்பத்தியா ளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியுள்ளதாவது, பாரம்ப ரிய தங்கநகை வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்த நாட்டின் வடிவமைப்பை கொடுத்தாலும் செய்து கொடுத்து வருகிறோம். குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாக தங்க நகை விலை ஏறுகிறதே தவிர, தங்கநகைத் தொழிலாளர்க ளின் வாழ்க்கைத்தரம் என்பது உயராமல் மிகவும் சிரமப்ப டும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளார்கள். 

இந்நிலையில் தங்கத்தின் விலையேற்றத்தால் கூலியின் சத விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இது தங்கநகை தொழி லாளர்கள் மத்தியில் பெரும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமன்றி ஏராளமான யூனிட்டு கள் தொழிற்சாலை அமைத்து மிக குறைந்த ஊதியத்தில் ஆட்களை வைத்து வேலை செய்கிறார்கள். சில தொழிற்சாலையில் கிராம் அடிப்படையில் கூலி கொடுக்கி றார்கள். அரசாங்கம் நிர்ணயித்தி ருக்கும் குறைந்தபட்ச கூலி கூட கொடுக்காமல் 12 மணிநேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். இதனால் நியாயமான கூலி கொடுக்கும் பட்டறை தொழிலா ளர்களால் தொழில் செய்ய இயலா மல் பாதிப்புக்குள்ளாகி வருகிறார் கள். தற்போது செயின், செட் ட்ராப்ஸ், மோதிரம் இவைகளை தொழிற்சாலை யூனிட்டுகள் செய் வதால், பட்டறையில் ஆட்களை வைத்து வேலை செய்து கொண் டிருந்த நகைத்தொழிலாளர்க ளுக்கு கூலி கட்டுபடியாகாமல் வேறு வேலைகளை நாடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். 

இதனால் நகை வேலைக்கு தேவையான இதர தொழிலாளர்க ளும், தொழிலாளர் வாழும் பகுதிக ளில் உள்ள குறிப்பாக கம்பி இழுத் தல், டைஒர்க், மெருகுக்கடை,  நகை பட்டை தீட்டுதல், தேநீர் கடை,சில்லரை வர்த்தகம் போன்ற வைகளும் பெரும் பாதிப்புக்குள் ளாகியுள்ளன. விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ளது, வீட்டுவா டகை, குடிநீர், மின்கட்டணம், பட்டறைக்கு தேவையான மூலப் பொருட்கள் உயர்வு, எரிவாயு உள் ளிட்ட அனைத்து பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வேலை திறமையை மட்டும் நம்பி பட்டறை வைத்து வேலை செய்து கொண்டு இருக் கும் தொழிலாளர்களை தங்கநகை விலை உயர்வை காட்டி மீண்டும் கூலியைக் குறைத்து வேலை செய்யச்சொல்கிறார்கள். இத னால் கடன் தொல்லைக்கு ஆளாகி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தங்கநகை தொழிலா ளர்களின் நிலையை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோ சனை செய்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாத்திட வும், நல்லதொரு தீர்வு ஏற்படுத்தி நகை தொழிலாளர்களை பாது காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.