tamilnadu

img

பொய்வழக்கில் ஊழியர்கள் சிறைக்குப் போவதை வேடிக்கை பார்ப்பதா?

கோவை, ஜூன் 26 –  ஆளும் கட்சியினரின் அத்து மீறலுக்கு துணைபோவதும், சொந்த ஊழியர்கள் சிறைக்கு போவதையும் வேடிக்கை பார்க் கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கோவையில் புதனன்று  மதுக்கடைகளை மூடி விட்டு ஊழியர்கள் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் அருணாச்ச லம் என்பவர் மதுக்கூடத்தை (பார்) உள்வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த வியாழனன்று கடையின் பணி நேரம் முடிந்த பிறகு சட்டவிரோ தமாக விற்பனை செய்ய டாஸ் மாக் ஊழியர்களிடம் மதுபா னம் கேட்டுள்ளார். இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கணேஷ்  மற்றும் மகேந்திரன் மறுக்கவே அருணாச்சலம் டாஸ்மாக் ஊழி யர்களை தாக்கி மதுபானங்களை எடுத்துள்ளார். இதனை தடுக்க முயற்சித்தபோது கடையினுள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருணாச்சலம் சிங்காநல்லூர் காவல் நிலை யத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தன்னை தாக்கியதாக பொய் புகார் அளித்து, அரசு மருத்துவ மனைக்கு சென்று உள்நோயாளி யாக சேர்ந்துள்ளார். ஆளும் கட்சியின் நெருக்கடி காரணமாக காவல்துறையினர் கனேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சட்டவிரோமாக பூட்டிய கடையை திறந்து அத்துமீறி மதுபானக்கடைக்குள் புகுந்து மதுவகைகளை எடுத்த அருணாச் சலம் மீது டாஸ்மாக் ஊழியர்கள் அளித்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறையி னர் எடுக்கவில்லை.  இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுக்கரையை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியில் பார் ஊழியர்கள் சிலர் வாடிக்கையாளர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் மதுபான சரக்குகளை வாகனத் தில் கொண்டு வந்த ஓட்டுனர் வாகனம் செல்ல வழியில்லாததால் ஒலியெழுப்பியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த பார் ஊழியர்கள் சிலர் வாகன ஓட்டுநரை கடுமை யாக தாக்கி உள்ளனர். இதுகுறித் தும் புகார் அளித்தும் டாஸ் மாக் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. அனைத்து மது பான கூடங்களும் ஆளும்கட்சி யின் மேற்பார்வையில் இயங்கு வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதோடு, ஆளும் கட்சியின் அடாவடிக்கு துணை போவது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத் தில் பெருந்திரள் முறையீடு செய்வது என டாஸ்மாக் ஊழி யர்களின் தொழிற்சங்க கூட் டுக்குழு முடிவெடுத்தது. இதன்படி புதனன்று பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல  மேலாளர் அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான ஊழி யர்கள் குவிந்தனர். மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க மறுத்து அலுவலகத்தை முற்று கையிட்டு அமர்ந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்யும் நிலையில் டாஸ் மாக் நிர்வாகம் மவுனம் காப்பதா கவும், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய பார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும், சம்மந்தப்பட்ட பாரின் உரி மத்தை ரத்து செய்யாமல் டாஸ் மாக் கடைகளை திறக்க மாட் டோம் எனவும் ஆவேசமாக தெரி வித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள 303 டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு ரூ.5 கோடி வரை வணிகம் நடைபெறும் நிலையில் கடைகள் அடைக்கப்பட்டால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு உண்டாகும் நிலை ஏற்பட்டது. மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் 1 மணியாகியும் திறக் காததால் டாஸ்மாக் அதிகாரிக ளுக்கு பெரும் நெருக்கடி உரு வானது. இதனையடுத்து கோவை மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட டாஸ்மாக்  மேலாளர்கள் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.  இதைத்தொடர்ந்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் ஒருங்கினைப்பாளருமான ஜான், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முத்துவிஜய், எல்பிஎப் தமிழ்செல் வன், பாட்டாளி தொழிற்சங்கத் தின் ஜீவா, விற்பனையாளர் சங்கம் மாரிமுத்து, தேனீஈஸ்வரன் ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்களி டம் கோவை தெற்கு மாவட்ட மேலாளர் தேவிகா ராணி பேச்சு வார்த்தைகளின் முடிவுகளை அறிவித்தார்.  இதில் சம்பந்தப்பட்ட ஒண்டி புதூர் பார் உரிமையை உடனடி யாக ரத்து செய்வதாகவும், பொய் வழக்கு தொடுத்த மதுபானக்கூட உரிமையாளர் அருணாச்சலம் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு பரிந்துரை செய்யவும், சிறைக்கு சென்ற ஊழியர்களின் பணிப்பாதுகாப் பிற்கு எவ்வித ஆபத்தும் ஏற் படாது என்றும், மேலும் டாஸ் மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் வைத்திருக்கும் பல்வேறு கோரிக் கைகள் குறித்து நிர்வாகத்தின் அதிகாரத்திற்குட்பட்டு நிறை வேற்றுவதாகவும் உறுதியளித் தார். இதனையேற்று அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.