கேரளா ஆலப்புழா செர்தலா பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள செர்தலா பகுதியில் புதன்கிழமை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தாவூத், மொஹ்சின், மஜீத் மற்றும் ஐனோலா ஆகிய நால்வரும் செர்த்தலாவில் உள்ள நிதி நிறுவனத்திடம் இருந்து பயணத்தை திருடியதாக கூறப்படுகிறது.
விடுதியில் தங்கியுள்ள இரண்டு நாட்டினரின் விசாக்கள் காலாவதியானதாக விடுதி நிர்வாகம் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளது. அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். நால்வரும் டெல்லியில் முகாமிட்டு நாடு முழுவதும் கொள்ளையடிக்க 24 பேரை குழுக்களாக உருவாக்கியுள்ளனர். மகாராஷ்டிராவில் இது பதிவு செய்யப்பட்ட காரில் கேரளாவை அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை அனைவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.