tamilnadu

img

சாலையை சீரமைக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

கோவை, செப்.11- கோவை சிவானந்த புரத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி வாலிபர் சங்கத்தினர் நாற்று நடும் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சிவானந்தபுரம் மூன்றாவது வீதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இங்கு மின்சார வாரியம், தபால்நிலையம் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயன்ப டுத்தும் பிரதான சாலையாக உள்ளது. இந் நிலையில், இந்த சாலை தற்போது மழை யின் காரணமாக சேறும் சகதியுமாக மாறி யுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர்.  ஆகவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிவா னந்தபுரம் கிளையினர் சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின்  கிளை செயாலாளர் கனகராஜ், அருள்ராஜ், பாண்டிராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

;